Recent News

Pages

Thursday 14 April 2011



கோபாலப்பட்டினம் சில அடிப்படை தகவல்கள்
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையர்கோயில்  தாலுகாவில் அமைந்துள்ள ஒரு இயற்கைஎழில் நிறைந்த கிராமம்  கோபாலப்பட்டினம்  ஆகும்.
முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இந்த கிராமத்தின் பிரதான தொழில் மீன்பிடிதொழில் ஆகும் .
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9,184 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.இவர்களில் 4,355 ஆண்கள், 4,829 பெண்கள் ஆவார்கள். கோபாலப்பட்டினம் மக்களின் சராசரி கல்வியறிவு 75.12% ஆகும். தமிழ் மொழிக்கு அடுத்ததாக மக்களால் அதிகம் பேசப்படும் மொழியாக மலேசிய மொழியான மலாய் இருக்கிறது. திருச்சிராப்பள்ளி விமான நிலையம் இங்கிருந்து 120 கி.மீ. தூரத்தில் உள்ளது.
இக்கிராமத்திலிருந்து பெரும்பான்மையான பேர்கள் மலேசியாசிங்கப்பூர் ,சவுதி மற்றும்அரபு நாடுகளில் வசிக்கிறார்கள்.
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு நூலகமும்,
இஸ்லாமிய நூலகம்
இயங்கி வருகிறது.
மேலும் உடல்பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது .
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியின் கீழும்,
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் கீழும் உள்ளது .

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி,
அரசு உயர்நிலைப்பள்ளி போன்றவைகள் அரசு சார்பிலும்,
பாபுலர் மற்றும் சங்கீத் தனியார்  சார்பிலும் இயங்கிவருகிறது.
மேலும்,  AIRCEL அலைபேசி கோபுராமும் இங்குள்ளது.
1 கி.மீ தொலைவில் உள்ள மீமிசலில் 
மத்திய அரசு நிறுவனங்களான பாரத ஸ்டேட் பாங்கும்,
தொலைபேசி இணைப்பகமும் உள்ளது.
பகுதி நேரமாக இயங்கக்கூடிய ஒரு அரசு மருத்துவமனையும் உள்ளது.
மேலும், AIRCEL, VODAFONE, BSNL, RELAINCE, AIRTEL, IDEA  போன்ற அலைபேசி கோபுரங்களும் இங்குள்ளது.
இந்த ஊர், ஜெகதாப்பட்டினம்  காவல் நிலைய எல்லைக்குள்ளும்,
S.Pபட்டினம்  எல்லைக்குள்ளும் வருகிறது.
இதன் தற்போதைய ஊராட்சி மன்றத்தலைவராக திருதாகிர் உள்ளார் ,
ஜமாஅத் தலைவராக ஜனாப்.செய்யது முஹம்மது அவர்களும்,
துணை தலைவராக ஜனாப். இஸ்மாயில் அவர்களும்,   செயலாளராக ஜனாப்.முஹமது யூசுப் அவர்களும் இருக்கிறார்கள்.
தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் J.K. ரித்தீஸ் (தி.மு.க ) அவர்கள்.
சட்டமன்ற உறுப்பினர் திரு உதயம் எஸ்.சண்முகம்(தி.மு.அவர்கள். 

0 comments:

Post a Comment

Facebook

Recent Post Widget